எஸ்.ஐ. உள்பட 3 காவலர்கள் பணியிட மாற்றம்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உள்பட 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.


சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உள்பட 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
சென்னை-கும்பகோணம் சாலை ரோந்து வாகனத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், காவலர் இளங்கோ ஆகியோர் கோலியனூர் ரயில்வே கடவுப்பாதை பகுதியில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.
இதன் பேரில், ஹரிகிருஷ்ணன், இளங்கோ ஆகியோரை
ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
இதேபோன்று, பணியை முறையாக செய்யாமல் மது போதையில் இருந்ததாக, ரிஷிவந்தியம் தலைமைக் காவலர் சுந்தரவதனம் மீது புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவரும் ஆயுதப்
படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com