கள்ளக்குறிச்சி வட்டம், நீலமங்கலம் கிராமத்தில் வரும் 28-ஆம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும். இந்த முகாமில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கை மனுக்களை முன்னதாகவே அளித்து பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியரகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.