நல்லாசிரியருக்கு பாராட்டு விழா

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதைப் பெற்ற நல்லாசிரியர் கோ.ராசாராமுக்கு பாராட்டு விழா தமிழக ஆசிரியர் கூட்டணியின்

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதைப் பெற்ற நல்லாசிரியர் கோ.ராசாராமுக்கு பாராட்டு விழா தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் உளுந்தூர்பேட்டையை அடுத்த செங் குறிச்சி சுங்கச்சாவடி அருகே உள்ள ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 வட்டாரத் தலைவர் மா.முருகேசன் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் அருணா.சூரியகுமார் வரவேற்றார். மகளிரணிச் செயலாளர் சிவசங்கரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சக்திவேல், கல்வி மாவட்ட செயலாளர்கள் அ.லூர்து சேவியர், ஆரோக்கியதாஸ், இராசாமணி, விருசப்பதாஸ், ஏழுமலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராஜசேகர் சிறப்புரையாற்றினார். வட்டார நிர்வாகிகள் சுப்பிரமணியன், பழனி, ராதிகா, மலர்க்கொடி, மரியசகாயம், பாமா, வெங்கடேசன், அண்ணாமலை, சம்பத்குமார், பெருமாள் உள்பட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். வட்ட பொருளாளர் பெ.முருகேசன் நன்றி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com