சங்கராபுரம் அருகே பாச்சேரியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் உலக அமைதி தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளியை ஏற்று நடத்தும் ஆமினா அறக்கட்டளை தலைமை அறங்காவலர் மு.பாத்திமாஉசேன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் உலக அமைதி தின உறுதி மொழி ஏற்கப்பட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியைகள் கார்குழலி, ஜெயந்தி, ஜெயலட்சுமி, நித்யா, ஷமீம்
ஆகியோர் செய்திருந்தனர்.