மயிலத்தை அடுத்த பெரியதச்சூர் கிராமத்தில் அண்மையில் பெய்த மழையில் வீடு இடிந்து விழுந்த குடும்பத்தினருக்கு தொகுதி எம்எல்ஏ நிவாரண உதவிகளை வழங்கினார்.
அந்தக் கிராமத்தில் அரசு சார்பில் வழங்கப்பட்ட தொகுப்பு வீட்டில் பெரியசாமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் அண்மையில் பெய்த மழையினால் அவரது வீட்டின் தளம் இடிந்து விழுந்தது. இதனால் வீட்டில் வைத்திருந்த பொருள்கள் சேதமடைந்தன.
தகவல் அறிந்து அவரது வீட்டுக்குச் சென்ற மயிலம் தொகுதி எம்.எல்.ஏ இரா.மாசிலாமணி, பெரியசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வேட்டி, சேலை, அரிசி, பாத்திரங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது திமுக மாவட்ட துணைச் செயலர்கள் மலர்மன்னன், வசந்தா, பொருளாளர் ரவி, ஒன்றியச் செயலர்கள் சேதுநாதன், மணிமாறன், நிர்வாகிகள் ஜெயராமன், கோவிந்தராஜ், தனசு, வழக்குரைஞர் அருணகிரி, ஊராட்சிச் செயலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.