விழுப்புரம்
புதிய மின் மாற்றிகள் இயக்கி வைப்பு
செஞ்சி கோட்டம், அனந்தபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட அனந்தபுரம், சிற்றரசூர் பகுதியில் மத்திய அரசின் நகர்ப்புற ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிய மின்மாற்றிகள் மேற்பார்வை பொறியாளர் பி.காளிமுத்து
செஞ்சி கோட்டம், அனந்தபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட அனந்தபுரம், சிற்றரசூர் பகுதியில் மத்திய அரசின் நகர்ப்புற ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிய மின்மாற்றிகள் மேற்பார்வை பொறியாளர் பி.காளிமுத்து உத்தரவின் பேரில் சனிக்கிழமை இயக்கி வைக்கப்பட்டன.
செஞ்சி செயற்பொறியாளர் அனந்தநாராயணன், செயற்பொறியாளர் சீனுவாசன் ஆலோசனையின் பேரில், அனந்தபுரம் இளமின் பொறியாளர் கே.சங்கர் தலைமையில் புதிய மின் மாற்றிகள் இயக்கி வைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஆக்க முகவர்கள் ஜி.கண்ணன், ஆர்.ஏழுமலை, அனைத்து மின் வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மின் பாதை ஆய்வாளர் என்.தண்டபாணி நன்றி கூறினார்.