மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலய குருகுலம் பள்ளி மாணவர்கள் 11 பதக்கங்கள் வென்றனர்.
சென்னை, வில்ஆர்ச்சரி அகாதெமி நடத்திய மாநில அளவிலான வில் வித்தைப் போட்டியில், உளுந்தூர்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலய குருகுல மாணவ, மாணவிகள் 3 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
மாணவ, மாணவிகள் எம்.ஆர்.யோகேஷ்வரன், வி.மதுமிதா, கே.கௌதம் ஆகியோர் தங்கப் பதக்கமும், ஏ.எஸ்.புவனேந்திரன், ஸ்ரீவிஸ்வா, ஆர்.விபா, பி.ஸ்ரீகிஷோர் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், ஏ.திலீப், சி.சரண்ராஜ், எஸ்.பி.மனோகரன், ஸ்ரீலட்சுமிதேவி ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.
இவர்களுக்கு பள்ளி தாளாளர் யதீஸ்வரி அனந்த ப்ரேமப்ரியா அம்பா பாராட்டு தெரிவித்தார்.