தேசிய இளையோர் வார விழா

மேல்புதுப்பட்டு விவேகானந்தர் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில், தேசிய இளையோர் வார விழா அண்மையில் மேல்புதுப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

மேல்புதுப்பட்டு விவேகானந்தர் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில், தேசிய இளையோர் வார விழா அண்மையில் மேல்புதுப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
 சங்கச் செயலர் சே.காத்தவராயன் வரவேற்றார். திண்டிவனம் அரசு கல்லூரி உதவி பேராசிரியர் அ.தண்டபாணி தலைமை வகித்தார். மேல்மலையனூர் அரசுப் பள்ளி ஆசிரியர் ச.சங்கர், மானந்தல் ஆசிரியர் அ.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கிராம நிர்வாக அலுவலர் ஆ.காளிதாஸ், அங்கன்வாடி மைய ஆசிரியர் ஏ.கலாவதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
 இந்நிகழ்ச்சியில் பேச்சு, கட்டுரை, ஓவியம், மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. விழாவில் இளைஞர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சங்க உறுப்பினர் சி.சூர்யா நன்றி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com