கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்பேரில் இளைஞர் மன்றம் சார்பில் 62 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
பொலிகாளை ஆட்டுதல், கிரிக்கெட், கோலப்போட்டி, சிறுவர் கபடி, கைப் பந்து, பூப்பந்து, சிறுமியர் கபாடி, அறிவுத் திறன்போட்டி, குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் கடந்த ஜன.14-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெற்றன.
14-ஆம் தேதி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை ஆசிரியர் இரா.முருகானந்தம், காவல்துறை வைர.சக்திவேல் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
15 -ஆம் தேதி அவரவர் வீட்டின் முன் கோலப்போட்டி நடைபெற்றது. பின்னர், சிறுவர் கபடி, இரவு மாறுவேடப்போட்டி நடைபெற்றது. 16-ஆம் தேதி கைப்பந்து, சிறுமியர் கபடி மற்றும் அறிவுத் திறன் போட்டி நடைபெற்றன.
17-ஆம் தேதி சிறுவர் ஓட்டம், சாக்கு ஓட்டம், சிறுமியர் கயிறு தாண்டுதல், இசை நற்காலி, குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.