விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திண்டிவனம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை திண்டிவனத்தில் நடைபெற்றது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், தனியார் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் என்.நமச்சிவாயம் தலைமை வகித்தார்.
நகரச் செயலர் என்.வெண்ணிலாகபிலன், ஒன்றியச் செயலர்கள் ஜி.சொக்கலிங்கம், எஸ்.கண்ணன், ஏ.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செய்தி தொடர்பு இணைச் செயலர் தமிழன் பிரசன்னா, விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலரும், செஞ்சி தொகுதி எம்.எல்.ஏவுமான கே.எஸ்.மஸ்தான், மாநில தீர்மானக்குழு துணைத் தலைவரும், மயிலம் தொகுதி எம்.எல்.ஏவுமான இரா.மாசிலாமணி சிறப்புரையாற்றினர்.
திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ சீத்தாபதி சொக்கலிங்கம், மாநில மருத்துவர் அணி துணைச் செயலர் பா.சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.ரமணன், மாவட்ட துணைச் செயலர் ப.வசந்தா, மாவட்ட பொருளர் ம.ரவி, முன்னாள் மாவட்ட துணைச் செயலர் கே.அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.