எலவனாசூர்கோட்டை ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டையை அடுத்த எலவனாசூர்கோட்டையில் ஸ்ரீபிரஹன்நாயகி அம்பிகை சமேத ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் மஹோத்சவ விழா மார்ச் 19-ஆம் தேதி திருக்கல்யாணத்துடன் தொடங்கி நடைபெற்றது.
50 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேர் பொதுமக்கள் பங்களிப்புடன் செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தேரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா.குமரகுரு வடம் பிடித்து இழுத்து தொடக்கிவைத்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.