எனது ஒரே மகளுக்கு 2010 -ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சில வாரங்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். விவாகரத்தும் ஆகிவிட்டது. 7 ஆண்டுகளாக வரன் பார்த்து வருகிறேன். மிகவும் கவலையாக இருக்கிறது. எப்போது மறுமணம் கைகூடும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? 

உங்கள் மகளுக்கு சிம்ம லக்னம், சிம்ம ராசி. களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் நவாம்சத்தில் நீச்சம் பெறுகிறார். களத்திர ஸ்தானத்திலும் தொழில் ஸ்தானாதிபதி அசுபர் சாரம் பெற்றிருக்கிறார்.



உங்கள் மகளுக்கு சிம்ம லக்னம், சிம்ம ராசி. களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் நவாம்சத்தில் நீச்சம் பெறுகிறார். களத்திர ஸ்தானத்திலும் தொழில் ஸ்தானாதிபதி அசுபர் சாரம் பெற்றிருக்கிறார். தற்சமயம் சுகஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் செவ்வாய்பகவானின் தசை முடிந்து தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகு பகவானின் தசை நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து மறுமணம் கைகூடும். வெளிநாடு சென்று வசிக்கும் யோகமும் உள்ளது. எதிர்காலம் வளமாக அமையும். புத்திரபாக்கியம் உண்டு. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

- வாசகர், திருச்சி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com