உங்கள் மகளுக்கு லக்னாதிபதி மற்றும் மாங்கல்ய ஸ்தானாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்று மாளவிகா யோகத்தைக் கொடுக்கிறார். தன, களத்திராதிபதியான செவ்வாய்பகவான் தன ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் செவ்வாய் தோஷம் இல்லை. தற்சமயம் லக்னாதிபதியின் தசையில் லாப ஸ்தானத்திலுள்ள பாக்கியாதிபதியின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.