கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி அளிக்கும் நடிகர் சிவக்குமார் குடும்பம்!

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, 2டி நிறுவனம் உள்ளிட்ட சிவக்குமார் குடும்பத்தினர்...
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி அளிக்கும் நடிகர் சிவக்குமார் குடும்பம்!

தமிழகத்தைத் தாக்கியுள்ள கஜா புயலால், இதுவரை இல்லாத அளவில் கிராமப்புற மக்கள், விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கஜா புயலின் கோரத் தாண்டவத்தில் நாகை மாவட்டம், நாகப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர் வட்டாரப் பகுதிகள் மிக கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. அனைத்து வகை விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், விவசாயிகளின் 20 ஆண்டு கால உழைப்பையும் நாசம் செய்துள்ளது இந்தப் புயல் சீற்றம். இதனால் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. 

இந்நிலையில் கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, 2டி நிறுவனம் உள்ளிட்ட சிவக்குமார் குடும்பத்தினர் ரூ. 50 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com