அதிமுக அலுவலகத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலையை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இச்சிலையானது, 8 அடி உயரத்தில் 800 கிலோ எடையில் வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.