நாட்டின் 70வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தில்லி ராஜபாதையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படை, பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பும், இதையடுத்து அரசின் பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் பங்கேற்றன. தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நடனம், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.