பெங்களுருவில் நேற்று தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-ஆப்கானிஸ்தான் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முதல் நாளன்று இந்திய அணி 6 விக்கெட்டை இழந்து 347 ரன்களைக் குவித்தது. அதன்பின் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 109 ரன்னில் ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. அதன்பின் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆப்கானிஸ்தான் அணி. இதனால் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் 262 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் டெஸ்டை இரண்டே நாள்களில் வென்றது.