வடசென்னை பேசின் பாலம் பகுதியில் வாகனங்கள் செல்லும் மேம்பாலத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், வியாசர்பாடியில் இருந்து சாலையை ஒட்டி 10 அடி அகலப்படுத்தி ஒரு மேம்பாலம் கட்டலாம். இதனை போர்க்கால அடிப்படையில் கட்டி முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆ.ஜெயகிருஷ்ணன், சென்னை-82.