மீஞ்சூர் பேரூராட்சியில் செயல்படும் பொது நூல் நிலையத்தை தினமும் காலையில் தாமதமாக திறந்து மாலையில் சீக்கிரமாக மூடிவிடுகின்றனர். இதனால் செய்தித்தாள்கள் மற்றும் பல்வேறு நூல்களை வாசிக்க இந்த நூல் நிலையத்தையே நம்பியுள்ள புதுப்பேடு, லட்சுமிபுரம், நந்தியம்பாக்கம் உள்ளிட்ட மீஞ்சூரை சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஏமாற்றமடைகின்றனர். இந்நூல் நிலையம் முறையாக செயல்பட மாவட்ட நூலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோதை ஜெயராமன், மீஞ்சூர்.