திருவொற்றியூர் மேற்கு குளக்கரைச் சாலையும், மேற்கு மாட வீதியும் மேடும் பள்ளமுமாக உள்ளது. இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். மேலும், வடக்கு மாட வீதியில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலை ஆக்கிரமிப்புகளையும், குப்பைகளையும் அகற்ற மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கல்யாணி ஈஸ்வரன், திருவொற்றியூர்.