திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் கட்டமுது விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் கட்டமுது விழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். 


திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் கட்டமுது விழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். 

அப்பருக்கு சிவபெருமான் கட்டமுது வழங்கியதாகக் கருதப்படும் இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் கட்டமுது விழ வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. 

அதன்படி, இந்த ஆண்டு கட்டமுது விழா நேற்று நடைபெற்றுது. இதையொட்டி கோயிலில் இருந்து நீலிவனேஸ்வரர் புறப்பட்டு, அப்பர் இளைப்பாறியதாகக் கருதப்படும் சோலையில் எழுந்தருளினார். அங்கு சிவனடியார்கள் மற்றும் ஓதுவார்களின் பக்தி சொற்பொழிவும், தேவார இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

விழாவில் திருச்சி, சேலம், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com