‘ஞானோபதேசம் பெறவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று, இரண்டு குறில் என்று மூன்றெழுத்துகளும்; ஐந்தாவதாக உள்ள தொங்கல் சீரில் ஒன்று அல்லது இரண்டு நெடில்களைக் கொண்ட நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனதன தாத்தனத் தனதானா
சருவிய சாத்திரத் திரளான
சடுதிக ழாஸ்பதத் தமையாத
அருமறை யாற்பெறற் கரிதாய
அனிதய வார்த்தையைப் பெறுவேனோ
நிருதரை மூக்கறுத் தெழுபார
நெடுதிரை யார்ப்பெழப் பொருதோனே
பொருளடி யாற்பெறக் கவிபாடும்
புலவரு சாத்துணைப் பெருமாளே.