உலக மகளிர் செஸ் சாம்பியன் போட்டியில் இருந்து இந்திய கிராண்ட்மாஸ்டர் துரோணவல்லி ஹரிகா தோல்வியுற்று வெளியேறினார்.
முன்னாள் சாம்பியன் ரஷியாவைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா கோஸ்டினிக்குடன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இரண்டாவது சுற்றில் 1.5-2.5 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியுற்றார்.
இதனுடன் உலக மகளிர் செஸ் போட்டியில் இந்தியாவின் பங்கேற்பு முடிவுக்கு வந்தது.