புகாரெஸ்டில் நடைபெற்று வரும் 23 வயதுக்குட்பட்டோர் உலக மல்யுத்த சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் ரவிக்குமார் தகுதி பெற்றுள்ளார்.
ஆடவர் 57 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவு அரையிறுதியில் ரவிக்குமார் 10-8 என்ற புள்ளிக்கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஜஹோன்மிர்ஸா டுரோபோவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். அதில் ஜப்பானின் டோஷிஹிரோவை எதிர்கொள்கிறார் ரவி. முன்னதாக காலிறுதியில் உக்ரைனின் டராஸ் மர்கோவிச்சை 12-4 என்ற புள்ளிக்கணக்கிலும், நாக் அவுட் சுற்றில் ருமேனியாவின் மரியன் கோவக்ஸைýம் வீழ்த்தினார் அவர்.