டென்மார்க் ஓபன்: இரண்டாம் சுற்றில் ஸ்ரீகாந்த்

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டி இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ர்.
டென்மார்க் ஓபன்: இரண்டாம் சுற்றில் ஸ்ரீகாந்த்


டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டி இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ர்.
ஓடென்ஸ் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் 21-16, 21-10 என்ற கேம் கணக்கில் உள்ளூர் வீரர் சொல்பெர்கை வென்று இரண்டாது சுற்றுக்கு முன்னேறினார்.
அதில் சீனாவின் மூத்த வீரரும் , உலகின முன்னாள் நம்பர் ஒன் வீரருமான லின் டேனை எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்திர் சமீர் வர்மா ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற ஜோனத்தான் கிறிஸ்டியுடன் மோதுகிறார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி இணை அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மற்றொரு இணையான மேக்னா, பூர்விஷா தோல்வியைத் தழுவினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com