ஆசிய கோப்பை: 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

ஆப்கானிஸ்தானுடன் நடைபெற்ற சூப்பர் ஃபோர் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானுடன் நடைபெற்ற சூப்பர் ஃபோர் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கன் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் தொடக்க வீரர்கள் மொகமது ஷஸாத் 20, ஈஷானுல்லா ஜனத் 10, ரஹ்மத் ஷா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்த நிலையில், ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, கேப்டன் அஷ்கர் ஆப்கன் இணை சிறப்பாக ஆடி ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. 5 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து அஷ்கர் ஆட்டமிழந்தார். நபி 7, நஜிபுல்லா 5 என சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆப்கானிஸ்தானுடன் நடைபெற்ற சூப்பர் ஃபோர் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 97 ரன்களை எடுத்த ஹஸ்மத்துல்லா, 10 ரன்களுடன் நைப் ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 257 ரன்களை எடுத்தது ஆப்கானிஸ்தான்.
 இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 49.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
 அணியில் அதிகபட்சமாக இமாம் உல் ஹக் 80,பாபர் ஆஸம் 66 ,ஷோயிப் மாலிக் 51, கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது 8, அஸிப் அலி 7, ஹாஸன் அலி 6 ரன்களையும் எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com