எஸ் சினிமா கம்பெனி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "பார்த்திபன் காதல்'. யோகி, வர்ஷிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் வள்ளிமுத்து. படம் குறித்து இயக்குநர் பேசும்போது... ""காதலை முன்வைத்து சமீபமாக தமிழகத்தில் நடக்கும் சம்பவங்கள் திகிலூட்டுகின்றன. அன்றாட நாகரீக வளர்ச்சியின் பிடியில் தமிழகம் திளைக்கிற நேரத்திலும் காதலை முன் வைத்து நடக்கிற அடாவடிகள், ஆணவப் படுகொலைகள், ஜாதி அமைப்புகளின் தாக்குதல்கள் என காதலுக்கு இங்கே பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. இப்படி அண்மையில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை மையப்படுத்தி இந்த திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. காதல் கதை என்றாலே வழக்கமான பெற்றோர்களின் எதிர்ப்புகள் என்பதை தாண்டி, நிறைய சவால்கள் காதலர்களுக்கு உள்ளன. அதை எல்லாம் சொல்லும் விதமாக கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஓவிய கல்லூரி மாணவனுக்கும், கிராமத்து கல்லூரி மாணவிக்கும் காதல். இந்த காதலில் அவர்களுக்கு வந்த எதிர்ப்புகள் என்ன.. அதை அவர்கள் எப்படி எதிர்த்து மீண்டார்கள் என்பது கிளைமாக்ஸ். இது முழுமையான காதல் கதையாக இருக்கும்.''
கும்பகோணம், ராஜபாளையம், தென்காசி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது, ஒளிப்பதிவு - தங்கையா மாடசாமி. இசை - பில்லா. பாடல்கள் - யுகபாரதி.