அறத்துப்பால் - அதிகாரம் 17 - பாடல் 6
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
- திருக்குறள்
பிறர்க்குக் கொடுத்து உதவுவதை
அடுத்துக் கெடுக்கும் தீயவர்
குடும்பம் கெட்டு ஒழிந்திடும்
அமைதியின்றி அழிந்திடும்
உண்ண உணவு கிடைக்காது
உடுத்த துணி கிடைக்காது
பசியும் பட்டினியிம் வாட்டிடும்
பாடுகள் பட்டு வருந்திடுவர்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்