""ஏன் இட்லியைக் கையால் மூடி எடுத்துக்கிட்டு வர்றே?''
""மறுபடியும் கீழே விழுந்துடக் கூடாது இல்லே!...''
எம்.ஏ.நிவேதா, 3/14ஏ, அரவக்குறிச்சிப்பட்டி, அசூர் - 620015.
""ஏண்டா, பரிட்சையிலேகொட்டாவி விடறே?....''
""இந்தக் கேள்விக்கான பதில் எட்டாத பழமா இருக்கு!...''
என்.பர்வதவர்த்தினி, பம்மல்.
""குழந்தை பொறந்திருக்கே.... ஸ்வீட் கிவீட் ஒண்ணும் கொடுக்கலையே?''
""ஆறு மாசத்துக்கு பால் தவிர எதுவும் கொடுக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு!''
ம.விக்னேஷ், காடையம்பட்டி.
""ராமுவுக்கும், முத்துவுக்கும் என்ன வித்தியாசம்?...''
""நீயே சொல்லு!...''
""ராமுவோட கையெழுத்து முத்து முத்தா இருக்கும்!.... முத்து வோட கையெழுத்து ராமு, ராமுவா இருக்காதில்லே!...''
தீ.அசோகன், சென்னை.
""ஏதோ தெய்வக்குத்தம் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்!...''
""ஏன்?...''
""எப்ப கோயிலுக்குப் போனாலும் பிரசாதம் கிடைக்க மாட்டேங்குது!...''
ஏ.நாகராஜன், பம்மல்
""சைபர்லே சைபர் போகுமாடா?''
""ஏன் போகாது? .... ஒரு சைபரை பெரிசா போடு!... இன்னொண்ணைச் சின்னதா அதுக்குள்ளே போடு!''
தீ.அசோகன், சென்னை - 600019.