களத்திர ஸ்தானாதிபதி விரோதம் பெற்ற கிரகத்துடன் இணைந்து இருப்பதால் திருமணம் தாமதமாகிறது. மற்றபடி பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் லாபஸ்தானத்தில் அமர்ந்து தன் ஆட்சி வீட்டைப் பார்வை செய்வதால் திருமண பாக்கியம் உண்டாகும். மேலும் தர்மகர்மாதிபதிகள் தொழில் ஸ்தானத்தில் இணைந்திருப்பதும் ஜாதகத்திற்கு வலுவூட்டுகிறது. அவருக்கு தற்சமயம் ராகுபகவானின் தசையில் பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு சமதோஷமுள்ள படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் வளமாக அமையும்.