என் நண்பர் மற்றொரு நண்பரிடம் ஒரு பெரும் தொகையை கடனாக வாங்கியிருந்தார். அவர் வாங்கியிருந்த கடனில் பாதியை ஒரு வட்டிக்கு கொடுத்து உதவினேன். நான் கொடுத்த பணத்தில் பாதியை திரும்ப கொடுத்துவிட்டு ஊரைவிட்டு போய்விட்டார். என் பணம் திரும்ப வருமா? என் ஆயுள் பாவம் எவ்வாறு உள்ளது?- வாசகர், கதிராமங்கலம்
உங்கள் ஜாதகப்படி நீங்கள் வெளியில் கொடுத்திருந்த பணம் இன்னும் மூன்றாண்டுக்குள் கை வந்து சேரும்.
உங்கள் ஜாதகப்படி நீங்கள் வெளியில் கொடுத்திருந்த பணம் இன்னும் மூன்றாண்டுக்குள் கை வந்து சேரும். உங்களுக்கு பூர்ண ஆயுள் என்று கூற வேண்டும். பிரதி தினமும் சிவபெருமானை வழிபட்டு வரவும்.