உங்களுக்கு களத்திர ஸ்தானாதிபதி அசுபக்கிரகத்துடன் இணைந்து இருப்பதால் திருமணம் தாமதமாகிறது. மற்றபடி அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அரசு உத்தியோகம் கிடைக்கும். திருமணமும் கைகூடும். பாக்கிய ஸ்தானம் வலுவாக உள்ளதால் பெற்றோர்களின் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணா
மூர்த்தியையும் வழிபட்டு வரவும்.