தற்சமயம் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவானின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்று இருப்பது குறை என்றாலும் அவர் லக்னாதிபதியின் சாரத்தில் இருப்பது சிறப்பு. மற்றபடி அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். நிரந்தர வேலையும் கிடைத்துவிடும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.