டி.எம்.இ., படித்துள்ள என் மகனுக்கு இங்கு வேலை கிடைக்காததால் தற்காலிக அடிப்படையில் வெளிநாட்டில் வேலை செய்கிறார். திருமணமும் இன்னும் அமையவில்லை. நிரந்தர வேலை அமையுமா? எப்போது திருமணம் நடைபெறும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?- ராஜேந்திரன், திருச்சி

தற்சமயம் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவானின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்று

தற்சமயம் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவானின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்று இருப்பது குறை என்றாலும் அவர் லக்னாதிபதியின் சாரத்தில் இருப்பது சிறப்பு. மற்றபடி அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். நிரந்தர வேலையும் கிடைத்துவிடும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com