எனக்கு நிரந்தர வேலை இல்லை. எப்போது கிடைக்கும்? எப்போது திருமணம் கைகூடும்? - வாசகர், சீர்காழி

உங்களுக்கு கடக லக்னம், மகர ராசி. குடும்பாதிபதியும் பூர்வபுண்ணியாதிபதியும் லாப ஸ்தானத்தில் இணைந்து இருப்பதால் புத்திர பாக்கியம் உண்டு என்று கூற முடிகிறது.

உங்களுக்கு கடக லக்னம், மகர ராசி. குடும்பாதிபதியும் பூர்வபுண்ணியாதிபதியும் லாப ஸ்தானத்தில் இணைந்து இருப்பதால் புத்திர பாக்கியம் உண்டு என்று கூற முடிகிறது. மேலும் இவர்களை பாக்கியாதிபதியான குருபகவான் பார்வை செய்கிறார். மேலும் லக்னாதிபதியும் குருபகவானும் கேந்திரத்தில் இருப்பதால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. உங்களுக்கு சர்ப்ப தோஷம் உள்ளது. முடிந்தால் திருநாகேஸ்வரம் சென்று நாகநாத சுவாமியை வழிபட்டு வரவும். களத்திர ஸ்தானாதிபதி நீச்சம் பெற்றிருந்தாலும் லக்ன கேந்திரத்தில் (பத்தாம் வீடு) அமர்ந்து இருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். அவருக்கு குருபகவானின் பார்வையும் கிடைக்கிறது. தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் தசை நடப்பதால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். நிரந்தர வேலையும் அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com