முன்னணி தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.2,176 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையிடம் அந்த நிறுவனம் சமர்ப்பித்துள்ள நிதி நிலையறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கடந்த நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,176.16 கோடியாக இருந்தது.
அதற்கு முந்தைய நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிகர லாபம் ரூ.4,336.43 கோடியாக இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிகர லாபம் 50 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
முந்தைய நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டு நிகர லாபத்தில் சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரிகள் சேர்க்கப்படவில்லை.
ஆனால், கடந்த நிதியாண்டின் இந்த கால அளவு நிகர லாபத்தில் இந்த வரிகள் கழிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த இரு நிகர லாபங்களையும் முழுமையாக ஒப்பிட முடியாது என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.