கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நடிகை ரம்பா மனு

தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நடிகை ரம்பா என்கிற விஜயலட்சுமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நடிகை ரம்பா மனு

தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நடிகை ரம்பா என்கிற விஜயலட்சுமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இவருக்கும், இலங்கையை பூர்வீகமாக கொண்ட, கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் இடையே 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-இல் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.
பின்னர், கனடாவில் வாழ்ந்து வந்த இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2012-ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், இந்து திருமணச் சட்டம் பிரிவு 9-இன் கீழ் இணைந்து வாழ கணவருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை இரண்டாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா என்கிற விஜயலட்சுமி கடந்த சனிக்கிழமை மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, டிசம்பர் 3-க்கு ஒத்தி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com