தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நடிகை ரம்பா என்கிற விஜயலட்சுமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இவருக்கும், இலங்கையை பூர்வீகமாக கொண்ட, கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் இடையே 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-இல் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.
பின்னர், கனடாவில் வாழ்ந்து வந்த இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2012-ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், இந்து திருமணச் சட்டம் பிரிவு 9-இன் கீழ் இணைந்து வாழ கணவருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை இரண்டாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா என்கிற விஜயலட்சுமி கடந்த சனிக்கிழமை மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, டிசம்பர் 3-க்கு ஒத்தி வைத்தார்.