இந்தப் படம் அனைவரையும் கவரும்: இயக்குநர் லிங்குசாமி நம்பிக்கை!

அனைவரையும் கவரும் வகையில் அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் நேரடி தமிழ்ப் படம் இருக்கும்.
இந்தப் படம் அனைவரையும் கவரும்: இயக்குநர் லிங்குசாமி நம்பிக்கை!

அல்லு அர்ஜூன் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமி இயக்கும் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் லிங்குசாமி பேசியதாவது:

நான் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கவுள்ளேன் என்று என்னுடைய கிராமத்தில் உள்ளவர்களிடம் சொன்னபோது அவர்களில் சிலர் என்னிடம், நாங்கள் அல்லு அர்ஜுனின் நடனத்துக்கு மிகப்பெரிய ரசிகர்கள் என்றார்கள். அவருக்கு தமிழிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் கவரும் வகையில் நான் அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் நேரடி தமிழ்ப் படம் இருக்கும். சண்டகோழி 2 படம் முடிந்த பிறகு இப்படம் தொடங்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com