விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளார்கள்.
இந்நிலையில் கிறிஸ்தவரான சமந்தா, இந்து மதத்துக்கு மாறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நாக சைதன்யாவும் சமந்தாவும் இணைந்து ஒரு பூஜையில் பங்கேற்பது போல சில படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. கிறிஸ்தவரான சமந்தா, இந்து மத பூஜையில் கலந்துகொண்டது ஏன் என்கிற கேள்விகளுடன் அவர் மதம் மாறிய செய்திகளும் தற்போது வெளிவந்துள்ளன.
அதேசமயம் விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளதால் அதனால் முதலில் இந்து முறைப்படி சில சடங்குகள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றன. இதுகுறித்து சமந்தா தரப்பில் விரைவில் விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.