ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் திரைப்பட இயக்குநர் அமீர், ராமநாதபுரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.
ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் திரைப்பட இயக்குநர் அமீர், ராமநாதபுரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.

கடந்த 2008ஆம் ஆண்டு, ராமேசுவரத்தில் தமிழ்த் திரையுலகம் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக, திரைப்பட இயக்குநர் அமீர் மீது ராமநாதபுரம் மாவட்டக் கியூ பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் திரைப்பட இயக்குநர் திங்கள்கிழமை ஆஜரானார்.
விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) எம்.பி. ராம், மீண்டும் ஜூன் மாதம் 9ஆம் தேதி அமீர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com