வருத்தம் தெரிவித்த சத்யராஜுக்கு கமல் பாராட்டு!

வருத்தம் தெரிவித்த சத்யராஜுக்கு கமல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
வருத்தம் தெரிவித்த சத்யராஜுக்கு கமல் பாராட்டு!

சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி விவகாரத்தில் நடிகர் சத்யராஜ், கர்நாடகத்துக்கு எதிராகப் பேசியதாக குற்றம்சாட்டி, அவர் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள 'பாகுபலி-2' திரைப்படத்தை தங்கள் மாநிலத்தில் வெளியிட விடமாட்டோம் என்று கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்கினார்கள். பாகுபலி-2 படத்தை வெளியிட அனுமதிக்குமாறு கன்னட அமைப்பினரிடம் படத்தின் இயக்குநர் ராஜமெளலி ஏற்கெனவே கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவர் சுட்டுரையில் (டுவிட்டர்) விடியோ மூலம் கோரிக்கை விடுத்தார். அதில், '9 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் தனிப்பட்ட முறையில் தெரிவித்த ஒரு கருத்து உங்களை காயப்படுத்தியிருக்கலாம். ஆனால், அதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் ஏற்கெனவே தயாரித்த பாகுபலி முதல் பாகம் உள்பட சத்யராஜ் நடித்த பல திரைப்படங்கள் கடந்த 9 ஆண்டுகளில் கர்நாடகத்தில் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தை மட்டும் சத்யராஜ் ஏற்றுள்ளார். அவர் தயாரிப்பாளரோ, இயக்குநரோ அல்ல' என்று ராஜமெளலி கூறினார். 

இதையடுத்து தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் நடிகர் சத்யராஜ். இதுகுறித்து வீடியோவின் வழியாக அவர் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் பாகுபலி போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். இதையடுத்து பாகுபலி படம் ஏப்ரல் 28 அன்று கர்நாடகாவில் வெளியாக உள்ளது.

இந்த விவகாரத்தில் வருத்தம் தெரிவித்த சத்யராஜுக்கு கமல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: சிக்கலான சூழலில் அறிவுடன் நடந்துகொண்ட சத்யராஜுக்கு வாழ்த்துகள். விருமாண்டி பட வசனத்தைச்  சொல்கிறேன்: மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுசன் என்று பாராட்டியுள்ளார்.

கமலின் பாராட்டுக்கு சத்யராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com