விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதையடுத்து சமந்தா - நாக சைதன்யா ஆகிய இருவருக்கும் வருகிற அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இருவரும் தங்கள் கையில் உள்ள படங்களை முடிப்பதில் மும்முரமாக உள்ளதாகவும் அறியப்படுகிறது.
சமந்தா கையில் தற்போது பல முக்கியமான படங்கள் உள்ளன. அட்லி - விஜய் படம், தியாகராஜன் குமாரராஜாவின் அநீதிக் கதைகள், விஷாலுடன் இரும்புத் திரை, சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநதி, ராம் சரணுடன் தெலுங்குப் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.