வரலாறு படைக்கும் 2.0 வியாபாரம்: லைக்கா மகிழ்ச்சி!

ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளுக்கான விநியோக உரிமை...
வரலாறு படைக்கும் 2.0 வியாபாரம்: லைக்கா மகிழ்ச்சி!

ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளுக்கான விநியோக உரிமை குளோபல் சினிமாஸ் நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து லைக்கா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம் ட்விட்டரில் கூறியதாவது: ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் பெரிய விலைக்கு 2.0 பட விநியோக உரிமை விற்கப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனமும் குளோபல் சினிமாஸும் இணைந்து வரலாறு படைக்கவுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வசனம் - ஜெயமோகன். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா-வும் முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.

2.0 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிவருவதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com