ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த பிருந்தாவனம் சமீபத்தில் வெளியானது. அதற்கு அடுத்ததாக இரவுக்கு ஆயிரம் கண்களில் என்கிற படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் அருள்நிதியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் கரு. பழனியப்பன் அடுத்து இயக்கும் படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அரசியல் களத்தை மையமாகக் கொண்ட படம் என அருள்நிதி அறிவித்துள்ளார்.
கரு. பழனியப்பன் கடைசியாக 2013-ல் ஜன்னல் ஓரம் என்கிற படத்தை இயக்கியிருந்தார். சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கவுள்ள படம் இது.