சினிமா சண்டைக் கலைஞர்கள் சங்கப் பொன்விழா: சென்னையில் இன்று நடக்கிறது

தென்னிந்திய திரைப்பட சண்டை கலைஞர்கள் சங்கத்தின் பொன் விழா, சென்னையில் சனிக்கிழமை பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. 

தென்னிந்திய திரைப்பட சண்டை கலைஞர்கள் சங்கத்தின் பொன் விழா, சென்னையில் சனிக்கிழமை பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. 

கடந்த 1967 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்னிந்திய திரைப்பட சண்டை கலைஞர்கள் சங்கத்துக்கு இது பொன் விழா ஆண்டாகும். இதை சிறப்பாக கொண்டாடும் வகையில், பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை மாலை நடைபெறும் இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைக்கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். 

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமிதாப்பச்சன், ஷாரூக்கான், சிரஞ்சீவி, மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பிரபல நடிகர்களும் இதில் கலந்து கொள்கின்றனர். சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த விழா இரவு 10 மணி வரை நடைபெறவுள்ளது. 

மூத்த கலைஞர்களுக்கு மரியாதை: விழாவில், சண்டை கலைஞர்களின் சாகசங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கு பெறும் நடன நிகழ்ச்சிகளுக்கும் இடம் பெறுகின்றன. 

விழாவில், சண்டை பயிற்சி கலையில் இதுவரை சாதனை புரிந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. மூத்த கலைஞர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படவுள்ளது. சங்கத்தின் தலைவர் அனல் அரசு உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com