ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இரண்டாவது கட்டமாக வரும் 26-ஆம் தேதி முதல் 31}ஆம் தேதி வரை சந்திக்க முடிவெடுத்துள்ளார்.
ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இரண்டாவது கட்டமாக வரும் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சந்திக்க முடிவெடுத்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் ரசிகர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இதற்கான உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை பெரு நகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைமை நிர்வாகிகளான வி.எம். சுதாகர், சிவராமகிருஷ்ணன் இருவரும் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
இரண்டாவது கட்டமாக... கடந்த மே மாதம் நடைபெற்ற சந்திப்பில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 19 மாவட்ட ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரஜினிகாந்த். சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த், "போர் வரும் போது பார்த்துக் கொள்வோம். அதுவரை காத்திருங்கள்' என தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாகத் தெரிவித்தார். 
இதனால் ரஜினிகாந்தையும், தமிழக அரசியல் களத்தையும் ஒப்பிட்டு விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இப்போது இரண்டாவது கட்டமாக தனது ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பின் போது தினமும் சுமார் ஆயிரம் ரசிகர்களை சந்திக்க ரஜினி முடிவு செய்துள்ளார். இதனால் மீண்டும் ரஜினிகாந்தின் அரசியல் களம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com