கடந்த சில வாரங்களாக ட்விட்டர் தளத்தில் அரசியல் பதிவுகள் எழுதிவரும் கமல், தனது இயக்கப் பொறுப்பாளரை அரசு தற்போது கைது செய்துள்ளது அரசியல் வன்மம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் கமல் கூறியதாவது:
இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது. இது எமதுபெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது. நமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறிமாறிவரினும் நம் கட்சியற்ற கொள்கை மாறாது என்று கூறியுள்ளார்.