கடந்த சில வாரங்களாக ட்விட்டர் தளத்தில் அரசியல் பதிவுகள் எழுதிவரும் கமல், தனது இயக்கப் பொறுப்பாளரை அரசு தற்போது கைது செய்துள்ளது அரசியல் வன்மம் என நேற்று குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் குறித்து இன்று அவர் கூறியதாவது: சிறையில் சுதாகர் நலமாக உள்ளாரர். விடுவிக்கும் முயற்சியில் நமதியக்கத்தார் உறவினருடன் நானும் பேசினேன். இந்நாடக ஆசிரியரே மனம் மாறினால் நலம். அது புரிந்தவர்க்கான செய்தி. புரியாதோர் விலகி நின்று வேடிக்கை பாரும். வேலை முடிந்தபின் போற்றலாம் அல்லது புரிதலின்றித் வழக்கம்போல் தூற்றலாம் என்று எழுதியுள்ளார்.