நடிகர் நடிகைகளுக்குச் சமூகவலைத்தளங்களால் பிரச்னைகள் ஏற்படுவதால் அதிலிருந்து வெளியேறவேண்டும் என்று நடிகர் சங்கம் சார்பாக நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாங்கள் முடிவு செய்துவிட்டோம். அனைத்து நடிகர்களிடமும் கோரிக்கை வைக்கப்போகிறோம். சமூகவலைத்தளங்களில் இருந்து வெளியேறி பழைய பத்திரிகைப் பாணிக்கு மாறச் சொல்லப் போகிறோம். ஜல்லிக்கட்டு குறித்த விஷால் கருத்து என்று ஒரு தவறான தகவல் பரவி பிரச்னையாகிவிட்டது. பத்திரிகையாளர்கள் என்கிற பெயரில் இந்த நடிகர் இதைச் சொன்னார் அந்த நடிகர் அதைச் சொன்னார் என்று தவறான தகவலைத் தருகிறார்கள். உடனே இது எல்லோருக்கும் பரவிவிடுகிறது. இதற்கு ஆதாரமான தகவல் என்பது அவசியமற்றதாகிவிடுகிறது. என்னுடைய மக்கள் தொடர்பாளர் மூலமாகவே அல்லது மைக்கின் முன்போதான் என் கருத்தைச் சொல்லவே விரும்புகிறேன்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பீட்டாவில் எந்த நடிகராவது இருந்தால் அவர்களை அந்த அமைப்பிலிருந்து வெளியேறச் சொல்லியிருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.