நான் தமிழ் பொறுக்கிதான்: சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி

நான் கண்டிப்பாக தமிழ்ப் பொறுக்கிதான். ஆனால் எங்கே பொறுக்க வேண்டும் என எனக்குத் தெரியும் என தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தமிழ் இணையதள  துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின்  தலைவர் ப
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தமிழ் இணையதள துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தலைவர் ப

நான் கண்டிப்பாக தமிழ்ப் பொறுக்கிதான். ஆனால் எங்கே பொறுக்க வேண்டும் என எனக்குத் தெரியும் என தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தமிழ் இணையதள துவக்க விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியது:

இணையத்தின் மதிப்பை உலகமே உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழில் இணையம் என்பது மிக முக்கியத் தேவை. ஒளிப்பதிவாளர்களுக்கு இது மிகவும் முக்கியமான இணையதளம். இந்த இணையதளம் தமிழில் இருப்பதால் ஒளிப்பதிவு தொடர்பான சந்தேகங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஒளிப்பதிவில் இருக்கும் சந்தேகங்களை இந்த இணையத்தில் நிறைய கொடுக்க வேண்டும். இணையதளத்தின் பலத்தை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்து ஒளிப்பதிவை வியந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

பல சமயங்களில் கற்பனையை ஊக்குவிக்கும் ஊற்றாக ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். வின்சென்ட் மாஸ்டர், பி.எஸ்.லோகநாத், ஜி.கே.ராமு, பிரசாத் இன்னும் ஏனைய ஒளிப்பதிவாளர்கள் எல்லோரிடமும் கற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறேன். பொருட்செலவை அதிகமாக்கினால் உலகத் தரத்தை மிஞ்சும் அளவுக்கு நம் ஒளிப்பதிவாளர்களால் படம் எடுக்க முடியும்.

தொழில்நுட்பத்துக்கு மொழி, இனம், ஜாதி என எதுவும் கிடையாது.

இவற்றையெல்லாம் கடந்ததுதான் சினிமா. சினிமாவில் எல்லா கலையும் மிக முக்கியமானது. "விருமாண்டி'யில் வரும் மீசை எல்லாம் நானே வைத்துக் கொண்டது. ஒளிப்பதிவும் அதுபோலத்தான். நடனம், மேக்கப் மட்டுமன்றி ஒளிப்பதிவாளராகவும் மாறியிருப்பேன். ஆனால் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம்தான் கற்றுக் கொண்டேன். ஆக, எல்லாமே எனக்கு பயன்பட்டது.
நான் தமிழ் பொறுக்கிதான்: யாரோ ஒருவர் தமிழ் பொறுக்கிகள் என்று சொல்லியிருக்கிறார். ஆம், நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான். எங்கே பொறுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். தில்லிக்கு எல்லாம் சென்று நான் பொறுக்க மாட்டேன். திடீரென்று அரசியல் பேசுகிறார் என நினைக்காதீர்கள். நான் பேசுவது அரசியல் அல்ல, தன்மானம்.

அலங்காநல்லூரில் நின்றிருப்பேன்: சினிமாவில் நான் நடிக்க ஆசைப்பட்டதில்லை. தொழில்நுட்ப கலைஞராகவே வர விரும்பினேன். அதைவிட படித்து வேறு பதவிகளுக்கு சென்றிருந்தால் இன்று அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் நின்று கொண்டிருப்பேன் என்றார் கமல்ஹாசன்.
விழாவில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com