பள்ளிகள் திறந்து இயல்பு நிலைக்குத் தமிழகம் திரும்பியுள்ள நிலையில் இன்று இளம் நடிகர்களின் இரு தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.
சுந்தரபாண்டி படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன். இவருடைய 3-வது படம் சத்ரியன். விக்ரம் பிரபு, மஞ்சிமா நடித்துள்ள இந்தப் படத்தின் மூலம் முதல் படத்தில் கிடைத்த பாராட்டுகளை பிரபாகரன் மீண்டும் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் தமிழ்நாட்டில் 300 திரையரங்குகளில் வெளியாகிறது.
ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கெளதம் கார்த்திக், சனா நடித்துள்ள படம், ரங்கூன். முருகதாஸின் தயாரிப்பில் வெளிவருகிற படம் என்பதால் இந்தப் படத்தின் மீதும் ஒருவித எதிர்பார்ப்பு நிலவுகிறது.